கோவை:முதுகலை மாணவர்களை தொடர்ந்து, இளங்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கு, இன்று முதல் வகுப்பு துவங்கப்படுகிறது.இதையடுத்து, பல்கலை, கல்லுாரி வளாகங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. வகுப்பறைகள், ஆய்வகங்கள், மாணவர் விடுதி உள்ளிட்ட இடங்களில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன.மாணவர்களின் உடல் வெப்ப நிலையை சரிபார்க்க, நுழைவாயிலில் 'தெர்மோ ஸ்கேனர்' வைக்கப்பட்டுள்ளது.அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை, மாணவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், 'மாஸ்க்' அணியாமல் மாணவர்கள் கல்லுாரிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வழிமுறைகள் சரியாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க, பேராசிரியர்கள் அடங்கிய பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE