தொண்டாமுத்தூர்:பரமேஸ்வரன்பாளையத்தில், புதியதாக கட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பிடத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.தேவராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட பரமேஸ்வரன்பாளையம், பேங்க் வீதியில், சுமார், 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் உள்ள பல வீடுகளில், கழிப்பறைகள் இல்லை.இதனால், திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தி வந்தனர். தங்கள் பகுதியில் பொது கழிப்பிடம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில், புதிய பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. பணிகள் நிறைவடைந்து, சுமார், 6 மாதங்களுக்கு மேலாகிறது.ஆனால், இதுவரை, பொதுக்கழிப்பிடம் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப் படாமல், பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள், குறிப்பாக, பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுக்கழிப்பிடத்தை உடனடியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE