கோவை:ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., வினர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை, கண்டித்து டில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தி.மு.க., சார்பில் நேற்று முன்தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன், சுமார் 500 தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இவர்கள் மீது, ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE