பந்தலுார்:பந்தலுார் பகுதியில் அரசால் வழங்கப்பட்ட, கறவை மாடுகள் இறந்து வரும் நிலையில், புதைக்க இடம் இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர்.பந்தலுார் அருகே, கூவமூலா பழங்குடியின கிராமத்தில், 37 பயனாளிகள் உள்ளிட்ட, 58 பேருக்கு, கறவை மாடுகள் வழங்கப்பட்டன. அதில், நோய் பாதிப்பால், கடந்த ஒரு மாதத்தில், 11 மாடுகள் உயிரிழந்த போது, அதே பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டிற்கு உட்பட்ட பகுதியில் புதைக்கப்பட்டது.நேற்று முன்தினம் மீண்டும், 2 மாடுகள் உயிரிழந்த நிலையில், 'அவற்றை புதைக்க கூடாது,' என, எஸ்டேட் நிர்வாகம் உத்தரவிட்டது. இதனால், இறந்த மாடுகளை புதைக்க வழியில்லாமல் அவதியடைந்து வருகின்றனர். பேச்சுவார்த்தைக்கு பின், அதே இடத்தில் புதைக்கப்பட்டது.பயனாளி குட்டன் கூறுகையில், ''எங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழங்கப்பட்ட மாடுகள், தொடர்ந்து இறந்து வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தும் பயனில்லை.விசாரணை நடத்த வேண்டும். மேலும், இறந்த மாடுகளை புதைக்க இடம் ஒதுக்கி தர வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE