பந்தலுார்:பந்தலுார் நுாலகத்தில் நுாலகராக பணியாற்றி வரும், அறிவழகனுக்கு, மாநில அரசு பள்ளி கல்வித்துறை, பொது நுாலக இயக்ககம் சார்பில், டாக்டர் அரங்கநாதன் விருது வழங்கப்பட்டது. அவருக்கு, பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் சமுத்திரபாண்டியன் முன்னிலை வகித்தார். கூடலுார் கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலுவலர் மகேஸ்வரன் பேசுகையில், ''பந்தலுார் கிளை நுாலகத்தில் புரவலர்கள், வாசகர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, நுாலகரின் தனிப்பட்ட பணியே காரணமாகும்,'' என்றார். எல்.ஐ.சி. முகவர் ராமச்சந்திரன், வாசகர் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE