குன்னுார்:குன்னுார் சிம்ஸ்பூங்காவில், வரும் மே மாத கோடை சீசனுக்காக, 3.10 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்ய விதை விதைக்கும் பணி துவங்கியது.நீலகிரி மாவட்டம், குன்னுார் சிம்ஸ்பூங்காவில், ஏப்., - மே மாத கோடை சீசனுக்கு, ஜன., 15ம் தேதி, மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்படும். வரும் சீசனுக்கு, மூன்று லட்சத்து 10 ஆயிரம் நாற்றுக்கள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தோட்டக்கலை பண்ணை பசுமை குடில்களில், விதைகள் விதைக்கும் பணி துவங்கியது.மேரி கோல்டு, பிகோனியா, பெட்டூனியா, லுபின், சிலோஷியா, ஸ்வீட் வில்லியம், சால்வியா உட்பட, 30க்கும் மேற்பட்ட வகை நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE