அன்னுார்:ஊராட்சிக்கான வளர்ச்சி திட்டம் தயாரிக்க, தேர்வு செய்யப்பட்ட, 15 குழுக்களுக்கு, இரண்டு நாள் பயிற்சி வகுப்பு இன்று துவங்குகிறது.அனைத்து ஊராட்சிகளிலும், அடுத்த நிதியாண்டுக்கான தேவை குறித்து, 28 துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, கணக்கெடுத்து சமர்ப்பிக்கும்படி அரசு தெரிவித்துள்ளது. இந்த கணக்கெடுப்பு செய்ய, ஊராட்சிகளில், ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலர், ஆதிதிராவிடர் அல்லது பழங்குடி வார்டு உறுப்பினர், இளைய வயது வார்டு உறுப்பினர், சுய உதவி குழு உறுப்பினர், தன்னார்வலர், ஊராட்சி கூட்டமைப்பு செயலாளர், வறுமை ஒழிப்பு சங்க செயலர் என ஒன்பது பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கணேசபுரம், கிருத்திகா மஹாலில், இன்றும், நாளையும், காரே கவுண்டன் பாளையம், கரியாம்பாளையம், காட்டம்பட்டி, குன்னத்துார், குப்பனுார், குப்பேபாளையம், மசக்கவுண்டன் செட்டிபாளையம், நாரணாபுரம், ஒட்டர்பாளையம், பச்சாபாளையம், பிள்ளையப்பம்பாளையம், பொகலுார், வடக்கலுார், அக்கரைசெங்கப்பள்ளி ஆகிய, 15 ஊராட்சிகளை சேர்ந்த தலா, 9 பேர் வீதம், 135 பேருக்கு, பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட அளவிலான பயிற்றுனர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE