சூலுார்:இடையர்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்ட, ஊராட்சி அலுவலகத்தை அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார்.சுல்தான் பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்டது இடையர்பாளையம் ஊராட்சி. இங்குள்ள ஊராட்சி அலுவலகம் பழுதடைந்ததால், புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.19.72 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., கந்தசாமி முன்னிலை வகித்தார்.உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி அலுவலகத்தை திறந்து வைத்து பேசுகையில், ''அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து, அரசு நிறைவேற்றி வருகிறது. அந்தவகையில், ஊராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது,'' என்றார்.சுல்தான்பேட்டைஒன்றிய சேர்மன் ரத்தினம், துணைத்தலைவர் மனோகரன், மாவட்ட கவுன்சிலர் வித்யா, ஊராட்சி தலைவர் சுப்புலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதவி செயற்பொறியாளர் சுந்தர், பி.டி.ஓ.,க்கள் குழந்தைசாமி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE