மேட்டுப்பாளையம்:ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டு, காட்டுப்பகுதியில் விட்டனர்.மேட்டுப்பாளையம், சிறுமுகை சாலையில் சென்னாமலை உள்ளது. இதன் அருகே உள்ள சிராஜ் நகர் இரண்டாவது வீதியில், குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மலைப்பாம்பு, கோழியை விழுங்கிக் கொண்டிருந்தது. இயற்கை வன விலங்கு பாதுகாப்பு அறக்கட்டளையை சேர்ந்த பாபு மற்றும் குழுவினர், சிராஜ் நகர் சென்று, அங்கிருந்த மலைப்பாம்பை பிடித்து வந்தனர். 12 அடி நீளமும், 60 கிலோ எடையும் கொண்ட மலைப்பாம்பை, இக்குழுவினரும், சிறுமுகை வனச்சரக வனக்காப்பாளர்கள் சித்தன், தங்கராஜ், வனக்காவலர் ராஜேந்திரன் ஆகியோரும் மீட்டு, வனப்பகுதியில் விட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE