பரமக்குடி : நயினார்கோவிலிலுள்ள சமத்துவபுரத்தை மழைநீர் சூழ்ந்துள்ளதால், வீடுகள் சேதமடைந்து வருகிறது.
பி.கொடிக்குளம் ரோட்டில் 2009ல் சமத்துவபுரம் திறக்கப்பட்டது. அங்கு 100 வீடுகள் கட்டப்பட்ட நிலையில், தற்போது 40 வீடுகளில் மட்டுமே குடியிருப்பதாக மக்கள்தெரிவிக்கின்றனர். இங்கு குடிநீர் பிரச்னை உள்ளதுடன், பூங்கா வளாகம் சேதமடைந்து வீணாகி வருகிறது.தற்போது பெய்து வரும் மழையையடுத்து சமத்துவபுரத்தைமழைநீர் சூழ்ந்துள்ளது. தண்ணீர் வழிந்தோட வழியின்றி உள்ளதால், மக்கள் நோய் பீதியில் உள்ளனர். கட்டட மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்துவிழுவதுடன், சுவர்கள் சேதமடைந்துள்ளன.
நயினார்கோவில் பகுதியில் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை பார்வையிட வந்த, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தர்மேந்திரபிரதாப் யாதவ், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் சமத்வபுரம் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE