ராமேஸ்வரம் : புரெவி புயலால் ராமேஸ்வரத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்த பகுதியை கலெக்டர் ஆய்வு செய்து, நிவாரண பணியை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.
மூன்று நாட்களாக ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் கனமழை பெய்தது. மூன்று நாளில் ராமேஸ்வரத்தில் 44 செ.மீ., பாம்பனில் 22 செ.மீ., மழை பெய்தது. ராமேஸ்வரத்தில் புதுரோடு நடராஜபுரம், கரையூர் பகுதியில் உள்ள மீனவர் குடிசை வீடுக்குள் மழைநீர் புகுந்தது. நேற்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்,ராமேஸ்வரத்தில் மழைநீர் சூழ்ந்த வீடுகளை பார்வையிட்டு, தாசில்தார் அப்துல்ஜபார், நகராட்சி ஆணையர் ராமர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE