தேனி : கேரளாவில் இருந்து தமிழகம் வரும் ஏலத்தோட்ட தொழிலாளர்களை தவிர மற்ற அனைவருக்கும் இ---பாஸ் கட்டாயம் என தேனி கலெக்டர் பல்லவிபல்தேவ் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலால் கேரளா-தமிழகத்தின் தேனி மாவட்ட எல்லை இடையே பொதுமக்கள் பயணத்துக்கு இ-பாஸ் வேண்டுமா, வேண்டாமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இதுபற்றி தேனி கலெக்டர் பல்லவிபல்தேவ் கூறுகையில், நவ.,30ல் வெளியான அரசாணையில் கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரியில் இருந்து வருபவர்கள் தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ--பாஸ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டது. கேரளாவில் கொரோனா அதிகரிப்பதால் கம்பம்மெட்டு, குமுளி, போடிமெட்டு சோதனை சாவடிகளில் இ--பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளா ஏலத்தோட்ட பணிக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு இந்த நடைமுறை கிடையாது. இவர்கள் உரிய ஆவணங்கள், பாதுகாப்பு அம்சங்களுடன் சென்று வர அனுமதி உண்டு'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE