மதுரை : தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மதுரை வீட்டு வசதி பிரிவு செயற் பெறியாளர் கூறியுள்ளதாவது: மதுரை வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, விருது நகர் ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே செயல் படுத்தப்பட்ட திட்டங்களில் விற்பனையாகாத மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் குலுக்கல் முறையில் விற்க கடந்த அக்., 14 முதல் நவ., 12 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அண்ணா பல்கலையுடன் இணைந்து கணினி மூலம் குலுக்கல் இன்று (டிச., 7) காலை 10:00 மணிக்கு மதுரை அண்ணாநகர் வீட்டுவசதி வாரிய அம்மா திருமண மண்டபத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நடக்கிறது. விண்ணப்பித்தவர்கள் பங்கேற்கலாம், என கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE