மதுரை : நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் சாத்தையாறு நீர் பிடிப்பு மற்றும் உபகால் பகுதி விவசாயிகள், ரெட்டியார் சத்திரம் காய்கனி மகத்துவ மையத்திற்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு இந்திய இஸ்ரேல் தொழில்நுட்பத்தில் செயல்படுத்தப்படும் காய்கறி சாகுபடி, நாற்று உற்பத்தி, சொட்டுநீர் பாசன முறைகளை கேட்டறிந்தனர். நிழல்வலை மற்றும் பசுமை குடில் தொழில்நுட்பம் குறித்து இளநிலை ஆராய்ச்சியாளர் சதீஷ் ஆலோசனைகளை வழங்கினார். வேளாண் அறிவியல் மைய மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செல்வி, கிருஷ்ணகுமார் ஏற்பாடுகளை செய்தனர். அலங்காநல்லுார், திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி, மதுரை கிழக்கு, மேற்கு விவசாயிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE