மாவட்டத்தில் கொரோனா பரவலானது ஜூன் மாதம் வரை நாள் ஒன்றுக்கு 10 க்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டனர்.
ஜூலை மாதம் தொடங்கியதில் இருந்தே தொற்று கோர தாண்டவம் ஆடியது. இதனால் பாதிப்பு இரட்டிப்பானது. அதுவரை 1000 க்கும் குறைவான நபர்களே பாதிக்கப்பட்ட நிலையில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பரில் 7000 பேர் வரை பாதிக்கப்பட்டனர். அதற்கேற்றார் போல் உயிரிழப்பும் அதிகரித்தது. இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 195 பேர் உயிரிழந்துள்ளனர்.மழை காலம் தொடங்கியதால் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்ததோடு, 2 நாட்களுக்கு ஒரு முறை ஒருவர் உயிரிழந்த வண்ணம் உள்ளனர். இருப்பினும் கடந்த 2 மாதத்தில் தொற்றின் தாக்கம் குறைந்து டிஸ்சார்ஜ் விகிதம் அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் வரை 10,035 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மழைக்காலம் தொடங்கியதால் மக்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறுகையில்,' டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்தாலும் கடந்த வாரத்தை விட பாதிப்பு இந்த வாரம் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் மழைகாலங்களில் அரசு கூறும் வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்', என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE