திண்டுக்கல் : குளத்துார் விராலிபட்டியில் வள்ளுவம் அறக்கட்டளை, ஏ.பி.ஜே., அப்துல்கலாம் சமூக நல அறக்கட்டளை இணைந்து மரம் நடும் விழா நடந்தது.
பேராசிரியர் முருகானந்தம் வரவேற்றார். குளத்துார் ஊராட்சி தலைவர் சுகந்தி தலைமை வகித்தார். வள்ளுவம் அறக்கட்டளை செயலாளர் ஆனந்த்குமார், மருதை கலாம் முன்னிலை வகித்தனர். அப்பகுதியில் உள்ள குளக்கரையில் மரக்கன்றுகளை நட்டனர். இதில் மரங்களின் முக்கியத்துவம், மரங்களுக்கும் மழைக்கும் உள்ள தொடர்பு குறித்து விழிப்புணர்வு வழங்கினர். பேராசிரியர் பாண்டியராஜன், தொழிலதிபர் கவுதம், சமூக ஆர்வலர் தங்கவேல் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE