மதுரை : மதுரையில் நன்செய், புன்செய் விவசாயிகள் சங்க கூட்டம் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் நடந்தது.
செயலாளர் பரமன் முன்னிலை வகித்தார். பொருளாளர் நல்லாண்டி வரவேற்றார். உசிலம்பட்டி 58 கிராம கால் வாயில் கால்நடைகள் தீவினம், மக்கள் குடிநீருக்கு தண்ணீர் வழங்கும் 616 விதியை பயன்படுத்தி வைகையிலிருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். வைகை அணையில் கூடுதல் தண்ணீர் தேக்க ஏதுவாக அடுத்தாண்டு கோடை காலங்களில் நீர் வற்றியவுடன் துார் வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மானாவாரி பகுதியான டி.கல்லுப்பட்டி, பேரையூர், உசிலம்பட்டி பகுதிகளில் கேழ்வரகு, தினை, குதிரைவாலி உற்பத்தியை அதிகரிக்க வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE