மதுரை : பா.ஜ., வேல் யாத்திரைக்கு செல்ல முயன்ற நிர்வாகிகள் வாகனங்களுக்கு மதுரை திருமங்கலம் கப்பலுார் டோல்கேட்டில் போலீசார் தடை விதித்தனர்.
திருச்செந்துாரில் பா.ஜ., வேல் யாத்திரை இன்று (டிச.,7) நிறைவடைகிறது. இதில் பங்கேற்க திருமங்கலம் அருகே கப்பலூர் சிட்கோ பகுதியிலிருந்து பா.ஜ.,வினர் பிரசார பிரிவு தலைவர் குமரி கிருஷ்ணன் தலைமையில் வாகனங்களில் ஒருங்கிணைந்து செல்ல திட்டமிட்டனர். பிரசார வெளியீட்டு பிரிவு மாநில செயலாளர் ரேணுகாதேவி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கூடினர்.அனுமதியில்லாததால் வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.பா.ஜ., கொடிகளை டி.எஸ்.பி., வினோதினி தலைமையில் போலீசார் அகற்றினர்.
இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் தொண்டர்கள் வாக்குவாதம் செய்தனர்.பா.ஜ., மாநில பிரசார பிரிவு செயலாளர் ராஜா கூறியதாவது: வேல் யாத்திரைக்கு செல்வதற்காக 200 வாகனங்களில் தென் தமிழகத்தைச் சேர்ந்தோர் ஒன்று கூடினோம். போலீஸ் அனுமதி மறுத்ததால் வாகனங்களில் செல்ல முடியவில்லை. அரசு பஸ்களில் செல்வோம், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE