ஒட்டன்சத்திரம் : 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் அனைத்து தொகுதியிலும் அரசு கலைக்கல்லுாரி அமைக்கப்படும்'என, தி.மு.க., துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி பேசினார்.
ஒட்டன்சத்திரத்தில் 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் சக்கரபாணி தலைமை வகித்தார். எம்.பி., வேலுச்சாமி, மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, நகர செயலாளர் வெள்ளைச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், தங்கராஜ், சுப்பிரமணியன் பங்கேற்றனர்.துணைப் பொதுச்செயலாளர் பெரியசாமி பேசியது: தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நல்ல திட்டங்களை மக்களிடத்தில் மறைப்பதில் தான் அ.தி.மு.க, அரசு குறியாக உள்ளது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் அரசு கலைக்கல்லுாரி அமைக்கப்படும். குளிர்சாதன கிட்டங்கி கொண்டு வரப்படும். ஒட்டன்சத்திரம் நகராட்சியில் சேகரமாகும் குப்பையை கொட்டுவதற்கு நிரந்தரமான தீர்வு காணப்படும் என, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE