வாலாஜாபாத் : காஞ்சிபுரம் அடுத்த, வையாவூர் கிராமத்தில், ராஜகுளம் - முத்தியால்பேட்டை புறவழிச் சாலை இணைக்கும், இணைப்பு சாலை உள்ளது.
இதன் ஓரமாக, நத்தப்பேட்டை ஏரியில் இருந்து, வையாவூர் ஏரிக்கு செல்லும் நீர்வரத்துக் கால்வாய் செல்கிறது.இந்தக் கால்வாயை மீறி, காஞ்சிபுரம் - வையாவூர் சாலை நடுவே தண்ணீர் புகுந்ததால், தார் சாலையில் அரிப்பு ஏற்பட்டு, மரண பள்ளங்கள் உருவாகி இருந்தன. இந்நிலையில், 'நிவர்' புயலின்போது, அதிகமாக தண்ணீர் சென்றதால், கூடுதல் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.இவ்வழியே, இரவில் வரும் வாகன ஓட்டிகள், பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்து, காயமடைகின்றனர்.எனவே, காஞ்சிபுரம் - வையாவூர் சாலையில், சேதமடைந்த தார் சாலை மற்றும் மண் அரிப்பை தடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE