திருப்போரூர் : பூண்டி கிராமத்தில், மழையால், விவசாயி ஒருவரின் விவசாய கிணறு, பக்கவாட்டு சுவருடன் முழுமையாக இடிந்து உள்ளே விழுந்ததால், நிவாரணம் வழங்க, கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில், சமீபத்தில், புயல் மற்றும் பருவ மழை காரணமாக கன மழை பெய்தது. இதனால், ஓடை, விவசாய வயல்களில், மழை நீர் பாய்ந்தோடியது.இதில், திருப்போரூர் அடுத்த, பூண்டி கிராமத்தில் வசிக்கும் தேவசுந்தரம், 60, என்பவரின் விவசாய கிணற்றை சுற்றி மழை நீர் சூழ்ந்தது.இதனால், மண் சரிவு ஏற்பட்டு பக்கவாட்டு சுவற்றுடன் கிணற்றின் உள்ளேயே முழுமையாக சரிந்து விழுந்தது.இதுகுறித்து, விவசாயி கூறுகையில், ''கிணற்றை சீரமைக்க, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகும். மழையால், பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE