செங்குன்றம் : செங்குன்றம் அருகே, மின்சாரம் பாய்ந்து, பெண் பலியானார்.செங்குன்றம் அடுத்த கிராண்ட்லைன், ஈ.வெ.ரா., பெரியார் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி செல்வி, 53. நேற்று முன்தினம் இரவு, கிரைண்டரில் அரிசி மாவு அரைத்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக, மின்சாரம் பாய்ந்து, துாக்கி வீசப்பட்டார். குடும்பத்தினர், அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், போகும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்து, செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE