சென்னை : மாதாந்திர ஓய்வூதிய திட்டத்தில், கடந்த மார்ச் முதல், 1,266 புது பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர் என, மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், இந்திரா காந்தி தேசிய வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளி, விதவை உள்ளிட்ட, எட்டு வகையான ஓய்வூதிய திட்டங்களில், மாதந்தோறும், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகின்றன.சென்னை மாவட்டத்தில், பல்வேறு உதவித் தொகை திட்டங்களில், 1.95 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் உள்ளனர்.
இத்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள், வருவாய் துறையினரால், நேரடியாக பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டன. தற்போது ஊரடங்கு காலத்தில், 'இ - சேவைகளில் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.இத்திட்டங்களில், ஊரடங்கு அமலில் இருந்த, கடந்த மார்ச் முதல், 1,266 புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில், 1 லட்சத்து, 96 ஆயிரத்து, 632 பயனாளிகள்உள்ளனர்.மேலும், நிலுவையில் உள்ள, விண்ணப்பங்கள் தாலுகா அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் என, மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE