ஊத்துக்கோட்டை : ஆரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஊத்துக்கோட்டையில் உடைந்த தரைப்பாலம் சீரமைப்பு பணி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில், 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. போக்குவரத்து வசதிக்காக, தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், 'நிவர்' புயலால் பெய்த மழையில், பிச்சாட்டூர் நீர்த்தேக்கம் நிறைந்து, அதன் உபரி நீர், ஆரணி ஆற்றில் வெள்ளமாக சென்றதால், அக்டோபர், 25ம் தேதி, ஊத்துக்கோட்டை தரைப்பாலம் உடைந்தது.இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அனந்தேரி, போந்தவாக்கம், கச்சூர் என, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களின் அத்தியாவசியத் தேவைக்கு ஊத்துக்கோட்டை வர முடியாமல், மிகவும் அவதிப்பட்டனர்.
இதையடுத்து, தரைப்பாலத்தை சீரமைக்கும் பணியில், பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்நிலையில், ஆரணி ஆற்றில், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், இப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE