இருவர் மாயம்வெள்ளவேடு: வெள்ளவேடு அடுத்த, நேமம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகள் லாவண்யா, 19. ஆவடி அடுத்த, பருத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., சைக்காலஜி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.கடந்த, 3ம் தேதி வீட்டிலிருந்த இவர், திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இவரது தந்தை ஏழுமலை அளித்த புகாரையடுத்து, வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.செவ்வாப்பேட்டை: வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் சதீஷ், 38. கேட்டரிங் கம்பெனியில் மேனேஜராக பணிபுரிந்து வந்த இவர், 3ம் தேதி, வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இவரது மனைவி அருணா, செவ்வாப்பேட்டை போலீசில் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE