ஐ.சி.எப் : தனியார் நிறுவன மேற்பார்வையாளரிடம், வழிப்பறியில் ஈடுபட்ட மூவரை, போலீசார் கைது செய்தனர்.
வில்லிவாக்கம், பாளையம் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லோகேஷ்வரன், 31; தனியார் நிறுவன மேற்பார்வையாளர். நேற்று முன்தினம் மாலை, நியூ ஆவடி சாலை, ரயில்வே தொழிற்சாலை அருகே நடந்து சென்றார்.அப்போது, மூவர் கும்பல் அவரை வழிமறித்து, ஒன்றரை சவரன் செயினை பறித்து தப்பியது. ஐ.சி.எப்., போலீசார் விசாரித்தனர். இதில், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த செல்வம், 24, ராதாகிருஷ்ணன், 25, உதயகுமார், 25, ஆகிய மூவர், வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.மூவரையும், நேற்று கைது செய்த போலீசார், செயினை பறிமுதல் செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE