மப்பேடு : மப்பேடு அருகே, நாய் குறுக்கே வந்ததால், டூ - வீலரிலிருந்து தவறி விழுந்த ரயில்வே ஊழியர், மருத்துவமனையில் இறந்தார்.
கடம்பத்துார் ஒன்றியம், செஞ்சிபானம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் ஸ்ரீதர், 47. ரயில்வே ஊழியரான இவர், 28ம் தேதி இரவு, பேஷன் பிளஸ், டூ - வீலரில், நண்பரை பார்க்க பேரம்பாக்கம் சென்று கொண்டிருந்தார்.அப்போது, சத்தரை அருகே சென்ற போது, நாய் குறுக்கே வந்ததால் திடீரென பிரேக் போட்டதில் நிலை தடுமாறி, டூ - வீலர் விழுந்தது. இதில், படுகாயமடைந்த ஸ்ரீதர், ஆம்புலன்ஸ் மூலம், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின், மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீதர், நேற்று முன்தினம் இரவு இறந்தார்.இதுகுறித்து, மப்பேடு போலீசில், இவரது மகள் ஸ்ரீவிசாலி அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE