தாளவாடி: தாளவாடி பகுதியில், உலா வரும் சிறுத்தையை பிடிக்க, வனத்துறையினர் தயக்கம் காட்டுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். தாளவாடி மலைப்பகுதியில், சிக்ககாஜனூர், மல்லன்குழி உள்ளிட்ட கிராம பகுதிகளில், கடந்த சில வாரமாக சிறுத்தை நடமாட்டம் உள்ளது. சிறுத்தை நடமாடும் விவசாய தோட்டங்களில் கூண்டு வைத்து வனத்துறையினர் கண்காணித்தனர். ஆனால், சிறுத்தை சிக்கவில்லை. இதையடுத்து சூசையபுரம், தொட்டகாஜனூர் பகுதியில், செயல்படாத கல் குவாரிகளில் சிறுத்தை பதுங்கியுள்ளதா? என ட்ரோன் மூலம் தேடுதம் பணியில் ஈடுபட்டனர். இதிலும் சிறுத்தை சிக்கவில்லை. எனவே சிறுத்தையை பிடிக்க, வனத்துறையினர் இரவில் ரோந்து செல்ல வேண்டும் என்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், வனத்துறையினர் அலட்சியம் செய்வதாக, வருத்தம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: சிறுத்தை நடமாட்டத்தால், மாலை நேரத்தில் குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிப்பதில்லை. இரவு, 7:00 மணிக்கு மேல் விவசாய தோட்டங்களுக்கு, செல்லவே அச்சமாக உள்ளது. சிறுத்தையை பிடிக்காமல், வனத்துறையினர் ஏனோ மெத்தனம் காட்டுகின்றனர். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE