கோபி: தாய் மாயமானதாக, கோபி போலீசில், மகள் புகார் தெரிவித்துள்ளார். கோபி அருகே புதுப்பாளையத்தை சேர்ந்த, குமார் மனைவி செல்வி, 40; அக்.,27ல் வெளியே சென்ற செல்வி, வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அவரின் மகள் சவிதா, 23, புகாரின்படி, கோபி போலீசார் வழக்குப்பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.
*அம்மாபேட்டையை அடுத்த சிங்கம்பேட்டை, பொதியன்துண்டு காலனியை சேர்ந்தவர் பெருமாள், 24; லாரி டிரைவரான இவரின் மனைவி தேவி, 19; திருமணமாகி நான்கு மாதங்களான நிலையில், மூன்று மாத கர்ப்பமாக உள்ளார். கடந்த, 4ல் வீட்டில் இருந்த வெளியே சென்ற தேவி, வீட்டுக்கு வரவில்லை. கணவர் புகாரின் படி, அம்மாபேட்டை போலீசார், தேவியை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE