ஆத்தூர்: ஆத்தூர் பகுதி யில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, தி.மு.க.,வினர், 100 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சேலத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பங்கேற்க, ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி பகுதி யில் இருந்து வாகனங்களில் சென்ற, தி.மு.க.,வினரை ஆத்தூரில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதை கண்டித்து, ஆத்தூர் புறவழிச்சாலை, நரசிங்கபுரம் கூட்ரோடு ஆகிய இடங்களில், நான்கு மணி நேரத்துக்கு மேல், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருவேறு இடங்களில் நடந்த மறியல் குறித்து, ஆத்தூர் டவுன் போலீசார் தலா, 50 பேர் என, 100 பேர் மீது, வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE