மேட்டூர்: மேட்டூர், நகராட்சி ஆணையாளருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேட்டூர் நகராட்சி ஆணையாளராக இருப்பவர் சுரேந்திரஷா, 49. இவர், குடும்பத்துடன் மேட்டூர், ராஜாஜிநகரில் வசிக்கிறார். நேற்று சுரேந்திரஷா, அவர் மனைவி மற்றும் மகனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், சுரேந்திரஷா சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவியும், மகனும் தனிமைப்படுத்தி கொண்டனர். மற்றவர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது என்பதால், நகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE