வீரபாண்டி: சஷ்டி திதியை முன்னிட்டு, முத்துகுமார சுவாமிக்கு அபி ?ஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. ஆட்டையாம்பட்டி, வேலநத்தம் பாவடியில் உள்ள, முத்துகுமார சுவாமி கோவிலில், சஷ்டி திதி, கிருத்திகை நட்சத்திரங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். முருகனுக்கு உகந்த சஷ்டியான நேற்று, மூலவருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்டவைகளால் அபி?ஷகம் செய்யப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, கந்த சஷ்டி கவச பாராயணம் செய்தனர். இதே போல் காளிப்பட்டி கந்தசாமி கோவில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமண்யருக்கு, பூஜைகள் நடத்தப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE