பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அடுத்த ஒட்டனூரை சேர்ந்தவர் சரவணன், 37; கட்டட மேஸ்திரி. நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, தன் ஹூரோ ஹோண்டா பைக்கில் நெருப்பூரில் இருந்து, அவருடை வீட்டிற்கு சென்றார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலை வளைவிலுள்ள வீட்டின் சுற்றுச்சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், காயமடைந்த சரவணனை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலின்படி, ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE