கரூர்: வரும் சட்டசபை தேர்தலில், மீண்டும், அ.தி.மு.க., ஏற்பட நிர்வாகிகள் வீடுகளில் அகல் விளக்கு ஏற்றினர். அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில், தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக, அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்க நிர்வாகிகள், தொண்டர்கள் வீடுகளில் அகல் விளக்கு ஏற்ற வேண்டும் என, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் அறிவித்திருந்தனர். அதன்படி, கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவரும், எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி செயலாளருமான தானேஷ் முத்துக் குமார், தொழிற்பேட்டையில் உள்ள அலுவலகத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு முன், நேற்று மாலை அகல் விளக்கு ஏற்றினார். அதேபோல், அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்களும், வீடுகளில் அகல் விளக்கு ஏற்றினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE