குளித்தலை: 'குளித்தலை வாரச்சந்தையை முறையாக டெண்டர் விட்டு, வாரச்சந்தை நடத்த வேண்டும்' என, பொது மக்கள், கடைக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குளித்தலை நகராட்சியின் சார்பில் வெள்ளிகிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வந்தது. கொரோனா ஊரடங்கினால் வாரச்சந்தைகளை மூடவேண்டும் என அரசு அறிவித்தால், சந்தை செயல்படவில்லை. தற்போது, குறைந்த அளவு கடைகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. இந்த சந்தையை நம்பி குளித்தலையை சுற்றியுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மக்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன பணியாளர்கள் குறைந்த விலையில் காய்கறி மற்றும் மளிகை சாமன்கள் வாங்கி சென்றனர். எனவே, பொது மக்கள் மற்றும் வாரச்சந்தை கடைக்காரர்கள் நலன் கருதி நகராட்சி நிர்வாகம் முறையாக டெண்டர் விட்டு, வாரச்சந்தையை நடத்தவேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE