கரூர்: கரூர் அருகே, வேலாயுதம்பாளையத்தில் செல்லும் வாய்க்கால்களில், முட்செடிகள் அதிகளவில் முளைத்துள்ளன. இதனால், கழிவு நீர் செல்ல முடியாமல் பல இடங்களில் தேங்கி நின்று, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத் தொல்லை அதிகரித்து, மக்களை துன்புறுத்துகிறது. தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, வாய்க்காலில் வளர்ந்துள்ள அதிகப்படியான முட்செடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE