நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில், 2.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆறு ஊராட்சிகளுக்குட்பட்ட, 13 குக்கிராமங்களில் ஜல் ஜீவன் இயக்க திட்டத்தின் கீழ், 1,691 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி நடக்கிறது. ஆயில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், இப்பணிகளை, கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார். குடிநீர் சீரான அழுத்தத்தில் கிடைக்க திட்ட வழிகாட்டியின்படி வால்வுகள் மற்றும் குழாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனவா, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியிலிருந்து அனைத்து பகுதிகளுக்கும் சீரான அழுத்தத்தில் குடிநீர் வழங்க தேவையான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா, சாலையின் அகலம், நீளம் சரியாகவுள்ளதா என்பதை உறுதி செய்தார். ராசிபுரம் தாசில்தார் பாஸ்கர், பி.டி.ஓ., சாந்தா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE