நாமக்கல்: உற்பத்தி அதிகரிப்பாலும், நுகர்வு சரிந்துள்ளதாலும், உழவர் சந்தையில், ஒரு பப்பாளி, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் உழவர் சந்தைக்கு, மோகனூர் மற்றும் பழையபாளையத்தை சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட விவசாயிகள், 100 கிலோ பப்பாளி பழங்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இரண்டு வாரங்களுக்கு முன், உற்பத்தி குறைவாக இருந்ததால், ஒரு பப்பாளி, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று, ஒரு பப்பாளி, 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து, விவசாயிகள் சிலர் கூறியதாவது: பப்பாளி உற்பத்தி, தற்போது அதிகரித்துள்ளது. மேலும், தொடர் மழை, குளிர்காலம் துவங்கி உள்ளது. அதனால், ஒரு பப்பாளி, விலை, ஏழு முதல், 10 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களில், பப்பாளியை வாங்குவதற்கு ஆட்கள் இல்லை. நகர்ப்புறங்களில் உள்ள உழவர் சந்தைக்கு, வாகனங்களில் ஏற்றி வருகிறோம். ஆனால், விலை குறைவு காரணமாக, போக்குவரத்து செலவுக்கு கூட வருமானம் கிடைப்பதில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE