நாமக்கல்: தமிழக, பா.ஜ., சார்பில் வேல் யாத்திரை நிகழ்ச்சி கடந்த மாதம் பல மாவட்டங்களில் நடந்தது. நிவர் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. நிறைவு நாள் விழா, டிச.,7ல் திருச்செந்தூரில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று நடக்கவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, பா.ஜ.,வினர், நேற்று மாலை, கார் உள்பட பல்வேறு வாகனங்களில் புறப்பட்டனர். நாமக்கல் அடுத்த, கீரம்பூர் டோல்கேட்டில் அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, கட்சிக் கொடிகள் அகற்றப்பட்ட வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இதனால், சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE