நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், பிலிப்பாக்குட்டை பெத்தநாயக்கன்பட்டி சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்,38; மின் வாரிய ஊழியர். இவரது மனைவி செல்வராணி, 32. இருவருக்கும், ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஐந்து வயதில் மகனும் உள்ளார். ராஜ்குமாருக்கு செல்வராணிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என, கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினமும் இருவருக்கும் தகராறு நடந்தது. மனமுடைந்த செல்வராணி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆயில்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE