தேனி: பெரியகுளம் தெற்குதெருவை சேர்ந்தவர் செல்லராம், 37. இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் குருகார்த்திக், ரமேஷ், அய்யனார், பாண்டி, ராமசாமி ஆகியோருடன் சேர்ந்து பெரியகுளம் அருகேயுள்ள கல்லாறு பகுதிக்கு குளிக்க சென்றனர். அப்போது தண்ணீர் அதிகமாக வந்ததால், வெள்ளத்தால் செல்லராம் அடித்து செல்லப்பட்டார். மற்றவர்கள் தப்பித்தனர்.
வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட செல்லராமை தேடும் பணியில் தீயணைப்பு குழுவினர் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று மேல்மங்களம் தடுப்பணையில் அவரது உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து ஜெயமங்களம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE