டிச., 8, 2002
ராமநாதபுரம் மாவட்டம், பூசேரி என்ற சிற்றுாரில், 1922 செப்., 14ம் தேதி பிறந்தவர், கு.இராமலிங்கம்; புனைப்பெயர் குயிலன். பிழைப்புக்காக, மியான்மர் நாடு சென்று திரும்பினார். காங்கிரசில் இருந்தவர், பொதுவுடமை கட்சிக்கு மாறினார்.தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.ஹிந்தியில் எழுதப்பட்ட, விவேக சூடாமணி என்ற நுாலை, தமிழில் கவிதை நடையில் மொழிபெயர்த்தார். 17 படங்களில், 52 பாடல்களை எழுதியுள்ளார்.உரைநடை, புதினம், கவிதை, நாடகம், சிறுகதை, மொழிபெயர்ப்பு என, 116 நுால்கள் எழுதியுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை அமைத்தோரில், இவரும் ஒருவர். 2002 டிச., 8ம் தேதி, தன், 80வது வயதில் இயற்கை எய்தினார்.பன்மொழிப் புலமைக் கவிஞர் குயிலன் காலமான தினம் இன்று!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE