இந்திய மொபைல் சேவை சங்கத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, 4வது, 'இந்தியா மொபைல் மாநாடு' டில்லியில் இன்று துவங்குகிறது. இதை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, இந்த மாநாடு நடக்கவுள்ளது.

மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர்ரவிசங்கர் பிரசாத், இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 30 நாடுகளை சேர்ந்த, 210 பேச்சாளர்களும், 150 நிறுவனங்களும், 3,000 பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE