வால்பாறை:அரசு மருத்துவமனையில், நோயாளிகள் நலச்சங்கம் அமைக்க வேண்டும் என, மா.கம்யூ., கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.மா.கம்யூ., கட்சியின் வால்பாறை தாலுகா செயலாளர் பரமசிவம், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறை மலைப்பகுதியில், நீண்ட நாட்களாக அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது. இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி, கோவை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.வால்பாறை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச்சங்கம் நீண்ட நாட்களாக இல்லாததால், மருத்துவமனை தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச்சங்கம் ஏற்படுத்த வேண்டும். மேலும், மருத்துவமனையில் காலியாக உள்ள பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பயிணிடங்களை நிரம்ப வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE