பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சி, 17வது வார்டில் உள்ள கைபம்பை சீரைமக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சி 17வது வார்டு பகுதியை சேர்ந்த, பொதுமக்கள், பொள்ளாச்சி தாலுகா சதுரங்க கழக செயலாளர் பரமேஸ்வரன் கூறியதாவது:பொள்ளாச்சி நகராட்சி, 17வது வார்டு சல்டானா ரோட்டில் உள்ள கைபம்பை, கிருஷ்ணசாமி வீதி, சல்டானா ரோடு, பெருமாள் வீதி, திருவேங்கட வீதியில் உள்ள மக்கள் பயன்படுத்தி வந்தனர்.கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த குழாய் பயன்பாடு இன்றி உள்ளது. இது குறித்து, புகார் தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE