திருப்பூர்:இளநிலை இறுதியாண்டு பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நேற்று முதல் கல்லுாரிகள் திறக்கப்பட்டன.கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் முழுவதும் அனைத்து கல்லுாரிகளும் மூடப்பட்டன. இளநிலை இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு நேற்று முதல் கல்லுாரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்தன.
இது குறித்து, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் கூறியதாவது:கல்லுாரி வளாகங்களில் தனிநபர் இடைவெளி, முக கவசம் அணிதல், கிருசிநாசினி பயன்பாடு உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு அம்சங்களை மாணவர்களும், ஆசிரியர்களும் பின்பற்றினர். நுழைவாயிலில், 'தெர்மல் ஸ்கேனர்' மூலம் உடலின் வெப்பநிலை அளவு சோதிக்கப்பட்டது. முதல் நாளில், 95 சதவீத மாணவர்கள் வருகை புரிந்திருந்தனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
மாணவ, மாணவியர் கூறுகையில், 'என்னதான் ஆன்லைன் வகுப்புகள் நடந்தாலும், நேரடி வகுப்புகளுக்காக ஏக்கமாகவே இருந்தது. எட்டு மாதங்களுக்கு பிறகு கல்லுாரிக்கும் நுழையும் போது உற்சாகமாக உணர்ந்தோம். பழைய நிலைக்கு திரும்பிவிட்டதால் புது நம்பிக்கை எழுந்துள்ளது. 'தியரி' பாடங்களை ஆன்லைனில் நடத்தலாம். செய்முறை பாடங்களை ஆய்வகங்களில் நடத்தினால் மட்டுமே புரியும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE