திருப்பூர்:மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், மாவட்டம் விட்டு வேறு மாவட்டத்துக்கு பதிவை மாற்றுவதற்கு அந்தந்தப் பகுதி தாசில்தார்களிடம் சான்றொப்பமிட்ட குடும்ப குடிப்பெயர்ச்சி சான்றிதழ் பெற வேண்டியிருந்தது.இதற்காக, தாலுகா அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியிருந்ததால், அலைச்சல் இருந்தது. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உட்பட அடையாள ஆவணங்களில், ஏதாவது ஒன்றைக் கட்டாயம் சமர்ப்பிப்பதும் நடைமுறையில் இருந்தது.வேலைவாய்ப்பு மையத்தினர் கூறியதாவது:பதிவுதாரர்கள், சுய சான்றளிக்கப்பட்ட குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், இவற்றில் ஏதேனும் ஒரு அடையாள ஆவணத்தை சமர்ப்பித்தாலே போதும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.புதிய நடைமுறையைப் பின்பற்றி, மாவட்டம் விட்டு வேறு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு எளிதாக பதிவை மாற்றிக்கொள்ளலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE