ஸ்ரீவில்லிபுத்துார் : சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு, சாகும் வரை சிறை தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்துார், 'போக்சோ' நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விருதுநகர் மாவட்டம், தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த, பட்டாசு ஆலை தொழிலாளி தங்கவேல், 51. இவர், 2014ல், 'டிவி'யில் கார்ட்டூன் படம் காண்பிப்பதாக, 10 சிறுமியரை வீட்டின் மாடிக்கு அழைத்து சென்று, சாக்லெட் கொடுத்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியர், பெற்றோரிடம் கூறினர். புகார்படி, விருதுநகர் மகளிர் போலீசார், தங்கவேலை கைது செய்தனர். இவ்வழக்கு, ஸ்ரீவில்லிபுத்துார், 'போக்சோ' நீதிமன்றத்தில் நடந்தது.தங்கவேலுவிற்கு சாகும் வரை சிறை தண்டனை, 2 லட்சத்து, 45 ஆயிரம் ரூபாய் அபராதம், பாதிக்கப்பட்டதில், ஐந்து சிறுமியருக்கு, அரசின் சார்பில், தலா, 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க, நீதிபதி பரிமளா உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE