ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே முத்துப்பட்டினத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள புனித வனத்து அந்தோணியார் ஆலயத்திற்கு தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.இங்கு கடந்த சில வாரங்களாக பெய்து வரும் மழைநீர் செல்ல வழியின்றி வீடுகள் முன்பு தெருக்களில் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் மழை நீரை அதிகாரிகள் அகற்ற நடவடிக்கையெடுக்காததால், மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி வருகின்றன. இதனை அகற்ற அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE