சாயல்குடி: சாயல்குடி அருகே டீ.வேப்பங்குளம் கிராமத்தில் ஓராண்டுக்கு முன்பு துார்வாரப்பட்ட ஊரணியில் மழைநீர் நிரம்பாமல் குட்டையாக உள்ளது. சாயல்குடி சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் புயல்காரணமாக அதிகளவு மழைப்பொழிவு இருந்தது.ஊரணி நன்கு துார்வாரப்பட்டும், வெள்ளநீர் வழிந்தோடும் வழித்தடங்கள் துார்வாரப்படாமல் உள்ளது. இதனால் பல லட்சம் செலவு செய்தும் மழைநீர் சேகரிக்க வழியில்லாமல் உள்ளது.எனவே ஊரணி, கண்மாய் உள்ளிட்டவைகளில் வாறுகால்வாய்களை முறையாக சீரமைக்கவும், சீமைக்கருவேல ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE